டிராக்டர் மோதி வாலிபர் பலி: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

81பார்த்தது
சிங்கபெருமாள் கோவில் அருகே எதிர் திசையில் வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலி. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

திருவண்ணாமலை மாவட்டம் சிருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் வயது (24). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பணி முடித்துவிட்டு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த ட்ராக்டர் அர்ஜுனன் மீது மோதியதில் அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார்.

விசாரணையில் அர்ஜுனன் பணி முடித்துவிட்டு வார விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தது தெரியவந்தது. அதேபோல விபத்து ஏற்படுத்திவிட்டு நிக்காமல் சென்ற வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சுகுமார் வயது 41 என்பவரை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே எதிர் திசையில் வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி