மொபைல்போன் பறித்த இருவர் கைது

55பார்த்தது
மொபைல்போன் பறித்த இருவர் கைது
காஞ்சிபுரம், எண்ணெய்க்காரத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 47; இவரும் அவரது நண்பர் தனசேகர் என்பவரும், ஜெம் நகரில், கடந்த 7ம் தேதி, மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இருவர், மது அருந்த பணம் கேட்டதாகவும், அதற்கு ரமேஷ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், அங்கு வந்த இருவரும் ரமேஷை தாக்கி அவரிடம் இருந்த மொபைல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, தாலுகா போலீசில் ரமேஷ் அளித்த புகாரின்படி, காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரையைச் சேர்ந்த சண்முகம், (வயது 40), மற்றும் நாகலுாத்துமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 27). ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி