ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து

50பார்த்தது
சென்னை- இலங்கை- சென்னை இடையே, இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 4 விமான சேவைகள், போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, இன்று அதிகாலை 2. 10 மணிக்கும், இன்று மாலை 3. 05 மணிக்கும், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய, 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று அதிகாலை 3. 10 மணிக்கும், மாலை 4. 10 மணிக்கும் இலங்கைக்கு புறப்பட்ட செல்ல வேண்டிய, 2 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை- இலங்கை- சென்னை இடையே, இயக்கப்படும் 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாவும், கோடை விடுமுறைகள் முடிவடைந்து விட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கைகள், கணிசமாக குறைந்து உள்ளதால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி