"சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி"

72பார்த்தது
"சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி"
சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அவசர காலத்தில் மீட்பு பணிகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது.


பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகாக, சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள அடையாறு ஆற்று பகுதி வழியாக, தீவிரவாதிகள் சிலர் உள்ளே புகுந்து விட்டதாக கூறப்பட்டது. அதோடு விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டன. இதையடுத்து, விமான நிலைய அதிரடிப்படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீஸ் அதிரடி படையினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு படை குழுவினர், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் உட்பட அனைவரும், சென்னை விமான நிலைய ஓடு பாதைகளுக்கு பின்புறம், பழுதடைந்த பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பிச்சு அடித்து, தீயை அவசரமாக அனைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you