மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

70பார்த்தது
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
உத்திரமேரூர் பஜார் வீதியில், பேருந்து நிலையம் எதிரே நடுத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 10வது நாள் விழாவின்போது, உத்திரமேரூர் சுற்றிவட்டார கிராமங்களில் அம்மன் வீதி உலா விமரிசையாக நடக்கும். சிறிய அளவிலான இக்கோவிலை விரிவுபடுத்தி கட்டமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கற்றளி என்னும் கருங்கற்களால் புதிய வடிவில் கோவில் கட்டப்பட்டு திருப்பணிகள் முடிந்தன.

இதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, காலை 8: 30 மணிக்கு கலசம் புறப்பாடும், 9: 00 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி