சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

76பார்த்தது
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
பின்பு திருவண்ணாமலையில் இருந்து தனது கார் மூலம் சென்னையை நோக்கி பயணம் செய்தார்

இந்த நிலையில சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முதல்வர் வருகையை ஒட்டி திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுமோ என்று போக்குவரத்து போலீசார் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வழியில்
பேரிகேட் அமைத்ததால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்தினத்தில் ஏற்பட்டது.

தான் போகும் பாதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் எனவும் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்றும் கான்வாய்களை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு போட்ட நிலையிலும்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஒரகடம் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து போலீசார் பேரிகேட் போட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

அரசு பேருந்துகள் கூட செல்ல முடியாமல் பயணிகள் பேருந்திலேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.
முதல்வர் வருகைக்காக சுமார் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி