சென்னையில் திடீர் மழை விமானங்கள் தாமதம்

78பார்த்தது
சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை சூறைக்காற்று இடி மின்னல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள், 10 புறப்படு விமானங்கள் மொத்தம் 19 விமானங்கள் தாமதமாகி, பயணிகள் அவதிக்கப்பட்டனர்.

சென்னையில் தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்தபடி, தத்தளித்துக் கொண்டிருந்தன.

இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக்காற்று இடி மின்னல் அதிகமாக இருந்ததால், சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

அந்த நேரத்தில் கோவை, பெங்களூர், டெல்லி, பாட்னா, கொல்கத்தா, மும்பை, சிலிகுரி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 9 விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் வட்டம் அடித்து பறந்து கொண்டு, தத்தளித்தன. ஆனால் சுமார் 15 நிமிடங்களில், சூறைக்காற்று இடி மின்னல் ஓய்ந்ததும், இந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரை இறங்கின.

சென்னையிலிருந்து, புறப்பட வேண்டிய விமானங்களான இலங்கை, ஜெட்டா, ராஞ்சி, விசாகப்பட்டினம், மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கோவை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய 10 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி