சாய் பாபா தியான கூடம் திறந்து வைத்த இபிஎஸ்

85பார்த்தது
ஆலந்தூர் மணப்பாக்கத்தில் சென்னை புறநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மு காமராஜ் மற்றும் 157 ஆவது வட்டக் கழக செயலாளர் மு பாண்டியன் அவர்களின் நிறுவனமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் பெறும் வகையில் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் மையம் மற்றும் மணப்பாக்கம் ஸ்ரீ வெற்றி சாய்பாபா தியான மையம் தினந்தோறும் அன்னதானம் வழங்கும் கூடத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்
உடன் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் சாய்பாபா தியான கூட்டத்தை திறந்து வைத்த பொதுச்செயலாளர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார்.


சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கேபி கந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 157 ஆவது மாமன்று உறுப்பினர் உஷாராணி பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி