சேதமடைந்த ஒரகடம் சாலை

57பார்த்தது
சேதமடைந்த ஒரகடம் சாலை
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் சாலைகளை இணைக்கும் ஒரகடம் சாலை சந்திப்பில் மேம்பாலம் உள்ளது. ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

வாலாஜாபாதில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் இடதுபுறம் திரும்பி, ஸ்ரீபெரும்புதுார் செல்லும். இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. மேம்பாலத்தின் கீழ், மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. இதனால், மாசுக் கட்டுபாட்டு அலுவலகம் அருகே, மழைநீர் சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இதனால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, மேம்பாலம் அருகில் உள்ள பள்ளங்களை சீரமைப்பதுடன், விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி