தாய்லாந்து நாட்டில் இருந்து பச்சோந்திகள் கடத்தல்

61பார்த்தது
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர்.

இந்த பச்சோந்திகளால், வெளிநாட்டு நோய்க் கிருமிகள், இந்தியாவிற்குள் பரவிவிடும் என்று, ஒன்றிய வன உயிரின காப்பக குற்றப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், அதில் உயிரிழந்த 67 பச்சோந்திகள் தவிர, மற்ற 365 பச்சோந்திகளை, மீண்டும் விமான மூலம், தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

இந்த பச்சோந்திகளை சட்டவிரோதமாக மறைத்து, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

தொடர்புடைய செய்தி