விமான பயணி கைது

77பார்த்தது
சென்னை விமான நிலையத்தில், கொல்கத்தா செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மேற்குவங்க மாநில பயணி ஒருவர், சீட் பெல்ட் அணிய மறுத்து, விமான பணிப்பெண்கள் இடம் வாக்குவாதங்கள் செய்ததால், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சர்போஜீத் பவுல்தாஸ் (31). இவர் தமிழ்நாட்டில் கோவையில் ஒரு தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சர்போஜித் பவுல் தாஸ், அவருடைய சொந்த ஊருக்கு போவதற்காக, நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கோவையில் இருந்து டிரான்சிட் பயணியாக, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் நேற்று இரவு சென்னையில் இருந்து, மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கொல்கத்தா செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தார்.
சென்னையில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, விமான பணிப்பெண்கள், பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியும்படி கூறினர். ஆனால் சர்போஜித் பவுல் தாஸ், சீட் பெல்ட் அணிய மறுத்ததோடு, எதற்காக சீட் பெல்ட் போட வேண்டும் என்று விமான பணிப்பெண்கள் இடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதை அடுத்து விமான பணிப்பெண்கள், அந்தப் பயணி குறித்து, விமான கேப்டனிடம் புகார் செய்தனர்.

பின்பு பயணியை சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி