காஞ்சியில் 3. 6 செ. மீ. , மழை பதிவு

68பார்த்தது
காஞ்சியில் 3. 6 செ. மீ. , மழை பதிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்வதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு 10: 00 மணிக்கு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அதிகாலை 4: 00 மணி வரை விட்டு, விட்டு கனமழை பெய்ததால், அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில் 3. 6 செ. மீ. , மழை பதிவாகியுள்ளது.

அடுத்தபடியாக, உத்திரமேரூரில் 3. 2 செ. மீ. , மழையும், ஸ்ரீபெரும்புதுாரில் 2. 8 செ. மீ. , வாலாஜாபாத் 2. 2 செ. மீ. , குன்றத்துார் 2. 2 செ. மீ. , செம்பரம்பாக்கத்தில் 1. 9 செ. மீ. , மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி