சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை சாதிய ரீதியான மற்றும் தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்குக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கள்ளழகர் வழக்கமாக செல்லும் பாதையில், 483 மண்டக படிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை சாதிய ரீதியான பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின்போது கள்ளழகரை தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.