தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

57பார்த்தது
உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் பகுதி யைச் சேர்ந்தவர் பழனி மகன் பாண்டித்துரை, 30; இவரது தந்தை கடந்த மாதம் 28ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்தார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பாண்டித்துரை, மதுபோதையில் குருணை மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி