உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் எலவனாசூர்கோட்டை ஆசனூர் சாலையில் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தி கொண்டிருந்த எலவனாசூர்கோட்டை அடுத்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 50; கைது செய்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.