சங்கராபுரம் காவல் நிலையத்தில் சாராய வியாபாரி தப்பி ஓட்டம்

1068பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் உள்பட 5 பேர்களை போலிசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.

போலீசார் பல்வேறு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சாராய வியாபாரி மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். போலீசார் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. சாராய வியாபாரி கரும்பு காட்டிற்குள் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி