4, 000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

551பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் உள்ள , அருவங்காடு மேற்கு வனப்பகுதியில், கரியாலூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த இருவர் தப்பி சென்றனர்.

மேலும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 4, 000 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 60 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கேயே போலீசார் அதனை அழித்து தப்பி ஓடிய இருவர் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி