சங்கராபுரத்தில், நாட்டின் கோழிக்குஞ்சுகளை, ஆதரவற்ற பெண்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில், கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில் நாட்டின் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், 100 பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கினார்.