ரிஷிவந்தியம் அருகே தகராறில் ஈடுபட்ட நாலு பேர் மீது வழக்கு

74பார்த்தது
ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் செல்வம், 37; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கேசவன் மகன் ஏழுமலை என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஏழுமலை தரப்பினர் ஒன்று சேர்ந்து, செல்வம் மற்றும் அவரது மனைவி புஷ்பகலா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், கேசவன் மகன்கள் ஏழுமலை, 56; ஏழுமலை மகன் மணிகண்டன், பாண்டியன், முருகன் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, ஏழுமலையை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி