அரசு பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி

54பார்த்தது
கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 23; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 19ம் தேதி மாலை 6: 30 மணியளவில் பஜாஜ் பைக்கில் கொங்கராயபாளையம் சென்றார்.

கொங்கராயபாளையம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி