ராஜ்நாத் சிங் பொய் பேசுவது வருத்தமளிக்கிறது

72பார்த்தது
ராஜ்நாத் சிங் பொய் பேசுவது வருத்தமளிக்கிறது
ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு மறுபங்கீடு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அதைப் படித்தீர்கள்? கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி