கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மழை தொடர்பான ஆய்வை முன்னெடுத்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரையான தென்மேற்கு பருவமழை காலத்தில் மதுரை மாவட்டத்தில் கிடைக்கும் சராசரி மழையளவு 325 மி.மீ. எனவும் இந்தாண்டில் அதிகபட்சமாக 298 மி.மீ., மழை தான் பெய்யும் எனவும் ஆய்வில் எதிர்பார்க்கப்படுகிறது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். அதே நேரம் விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதால் கிணற்று பாசனத்திற்கு பஞ்சமிருக்காது.