பெண்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை.. வீடியோ

79104பார்த்தது
திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். சினிமா துணை நடிகராக இருக்கும் இவர் சென்னையில் தங்கியிருந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி மாலதி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அதிகளவில் கடன் வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவர் வசிக்கும் பகுதியில் உள்ள உமா ராணியிடம் ரூ. 6 லட்சம் வரை மாலதி கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்தாததால் மாலதியை உமா ராணி 2 மாதங்களாக வீட்டின் அரசியில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மதியழகன், போலீஸ் உதவியுடன் சென்று மாலதியை மீட்டுள்ளார். உமா ராணி பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி