சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. விபத்துகள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது Road rage எனப்படும் சாலை வெறி. இதற்கு அர்த்தம் என்னவெனில், சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது, அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, பிறரைக் காரணமின்றி முறைப்பது, திட்டுவது, நமக்கு முன் செல்லும் வாகனம் மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து அவற்றை முந்த முயற்சிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் சாலை வெறி இருப்பதாக அர்த்தம்.