லாக்-அப் மரணமா? - காவல்துறை விளக்கம்

54பார்த்தது
லாக்-அப் மரணமா? - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் செவ்வாய் பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணமடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும், இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையில் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும் என்றும், விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி