ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கிய போதை இளைஞர்கள் (வீடியோ)

54பார்த்தது
சென்னை ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் இளைஞர்கள் சிலர் சத்தமாக பாட்டு பாடியும், புகைபிடித்து கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது பெண் பயணி ஒருவர் புகைபிடிக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில், இளைஞர்கள் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளனர். மேலும் அங்கிருந்த ஆண் பயணி ஒருவரையும் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 17 வயது சிறுவன் மற்றும் அசோக் (20) என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி