போலீசிடம் ஆபாசமாக பேசிய ஜோடியிடம் விசாரணை

67பார்த்தது
போலீசிடம் ஆபாசமாக பேசிய ஜோடியிடம் விசாரணை
சென்னை பட்டினப்பாக்கம், லூப் சாலையில் காரில் வந்த ஜோடி மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. போதையில் போலீஸ்காரரிடம் அத்துமீறிய ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் வேளச்சேரி லாட்ஜில் அவர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் கணவன், மனைவி இல்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி