'தங்கலான்' படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை

81பார்த்தது
'தங்கலான்' படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை
விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்’ படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்று திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது. வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் ஒடிடி தளத்தில் ‘தங்கலான்’ படத்தை வெளியிட தடை கோரி பொற்கொடி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி