இந்திரா காந்தி இந்தியாவின் தாய்: பாஜக எம்.பி., சுரேஷ் கோபி

56பார்த்தது
இந்திரா காந்தி இந்தியாவின் தாய்:  பாஜக எம்.பி., சுரேஷ் கோபி
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 'இந்தியாவின் தாய்' என்றும், மறைந்த மார்க்சிஸ்ட் தலைவர் ஈ.கே.நாயனார், காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரன் ஆகியோர் தனது 'அரசியல் குருக்கள்' என்றும் கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரனின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய பின் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கேரளா உடன் சேர்த்து தமிழ்நாட்டுக்கும் எம்.பி.,யாக உழைப்பேன் என இவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி