அபாரமாக ஆடிவரும் இந்திய அணி

574பார்த்தது
அபாரமாக ஆடிவரும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின் களமிங்கிய இந்தியா,ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 6.3 ஓவர்களில் 50 ரன்கள் கடந்தது. தற்போது 119 ரன்களைக் குவித்து இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை இந்தியா விரைவில் முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி