153 ரன்களில் இந்திய அணி ஆல்அவுட்

571பார்த்தது
153 ரன்களில் இந்திய அணி ஆல்அவுட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 153 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கி விளையாடி வந்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து 6 விக்கெட்களை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் 6 இந்திய அணி வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரோஹித் 39, கில், 36, கோலி 46 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி