4-1 என தொடரை கைப்பற்றிய இந்திய அணி

58பார்த்தது
4-1 என தொடரை கைப்பற்றிய இந்திய அணி
ஜிம்பாப்வேக்கு எதிரான 5-வது மற்றும் டி20 தொடரின் கடைசி போட்டியிலும் இந்திய அணி 42 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி 167/6 ரன்கள் எடுத்தது. 168 என்ற இலக்கை சேஸ் செய்த ஜிம்பாப்வே அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேயர்ஸ் 34 ரன்களும், மருமணி 27 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், சிவம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா 4-1 என தொடரை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்தி