சென்னை, மதுரை, நெல்லையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

84பார்த்தது
சென்னை, மதுரை, நெல்லையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
சென்னை, மதுரை, நெல்லையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை இன்று (ஜுலை 25) சென்னையில் தொடங்கி வைத்த பின் பேசிய அவர், இந்த ஆண்டு 6,565 பேர் டெங்குவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி