வங்கியில் பணம் போட்டாலோ, எடுத்தாலோ.. புதிய உத்தரவு

545பார்த்தது
வங்கியில் பணம் போட்டாலோ, எடுத்தாலோ.. புதிய உத்தரவு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வங்கிகளில் பணம் பெரிய தொகையை எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பண நடமாட்டத்தை வங்கி அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த பணம் எடுத்துச்சென்றாலும், உரிய ஆவணம் இருக்கிறதா என சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்ற அவர், ஐ.டி. அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி