“உனது அறுவை சிகிச்சையை நான் பார்த்துக்கொள்கிறேன். எதுவும் ஆகாது, கவலைப்படாதே. உனக்கு எதுவும் நடக்க விடமாட்டேன்” என அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்து தோனியின் காலில் விழுந்த ரசிகர், தனக்கு மூச்சுத்திணறல் உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தோனியிடம் கூறியதாகவும், அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்று போட்டிக்கு முன்னேறாமல் CSK அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.