சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் நிலையில் இந்தியாவிலும் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணிந்து பொது இடங்களுக்கு வர சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தொற்று பாதித்தவர் முக கவசம் அணிவது, அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும். அதே நேரம் தடுப்பூசி போடுதல், கை கழுவுதல், போதிய இடைவெளி போன்ற நடவடிக்கைகளுடன் முக கவசத்தை பயன்படுத்தப்படுத்தினால் தான் பரவலை குறைக்க முடியும்.