மகள் மூலம் பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்

63பார்த்தது
மகள் மூலம் பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்
சென்னையில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க சென்ற வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், நதியா (37) என்ற தரகர்தான் இதனை நடத்தி வந்தது என தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் திடுக்கிடும் தகவலாக நதியாவிற்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளதாகவும், அவரின் மூலம் உடன் படிக்கும் அழகான ஏழ்மையான குடும்பத்து மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை மூளை சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உள்ளூர் புரோக்கர்களை வைத்து சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது. ஒருசிறுமிக்கு ரூ.25 முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை பேசி விபசாரம் செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி