அரசுப்பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கை

83பார்த்தது
அரசுப்பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி அட்மிஷன் ஆரம்பித்த நிலையில், அதிகபட்சமாக சேலத்தில் 21,000 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சியில் 16,750 மாணவர்களும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசின் ‘காலை உணவு திட்டம்’ போன்ற பல திட்டங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகின்றனர். எனவே சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி