ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை காமராஜர் அடியோடு ஒழித்தார். மூடப்பட்ட 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, 12,000 பள்ளிகளை புதிதாக திறந்தார். இலவசக் கல்வி, மதிய உணவு கொடுத்து குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுளாக திகழ்ந்தார். குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து பள்ளி சென்று களைப்படைவதை கண்ட அவர், ஒரு மைல் தூரத்தில் ஆரம்ப பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, 5 மைல் தூரத்தில் உயர்நிலைப் பள்ளிகளை அமைத்தார்.