மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 'மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியதோடு நேதாஜியின் வரலாற்றையும் சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் தொட்டிலில் வளர்ந்தவருக்கு உண்மை வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்- இன் பிரச்சாரகராக ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு, மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்' என தெரிவிதுள்ளார்.