வள்ளலாரின் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்

51பார்த்தது
வள்ளலாரின் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்
திருவருட்பிரகாச வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு 153வது ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. மேலும் இன்று காலை சத்திய ஞான சபையில் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்ட போது, அந்த கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. காலை 6 மணி ஜோதி தரிசனத்தை தொடர்ந்து 5 வேளைகளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி