ஆடுகளால் மனிதர்களின் குரலை மட்டுமே வைத்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு விதமான உணர்வுகள் அடங்கிய ஒலி மாதிரிகளை ஆடுகளிடம் ஒலிக்க வைத்தபோது, அவற்றின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்மறையான ஒலிகள் ஆடுகளுக்குள் பயத்தை ஏற்படுத்தும் எனவும், நேர்மறையான ஒலிகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.