பெண்ணை சாலையில் நிர்வாணப்படுத்திய கும்பல் (வீடியோ)

44503பார்த்தது
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள வால்டோஹா கிராமத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வாலிபர் ஒருவர் தான் காதலித்த இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இளைஞரின் தாயை (55) தாக்கியுள்ளனர். அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு, அரை நிர்வாணமாக கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டுள்ளார். இதை அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் 31ம் தேதி நடந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி