நோய்வாய்ப்பட்டு நெருக்கடியான சமயங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டதுதான் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம். இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள் உட்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆயுஷ்மான் அட்டையை பெற nha.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.