திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நாளை காலை (மே 24) வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனால், அங்கும் இடம் இல்லாததால் பக்தர்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தரும் காரணமாக இந்த அலைமோதும் கூட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.