நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் ராகவன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகவன் தாக்கல் செய்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.