சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு.. 20 பேர் மீட்பு!

2597பார்த்தது
சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு.. 20 பேர் மீட்பு!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் ஏரளாமானோர் நேற்று சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு நேற்று மதியம் முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடை பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஓடையை கடக்க சிரமப்பட்டனர். இந்நிலையில் இன்று தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர் இணைந்து கயிறு கட்டி 20 பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 200- க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைப் பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி