தென் தமிழகத்தில் ரெட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

77968பார்த்தது
தென் தமிழகத்தில் ரெட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட் அலர்ட் மாவட்டங்களில் 21 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இரவு நேரத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி