காலவரையற்ற போராட்டம் அறிவித்த மீனவர்கள்

61பார்த்தது
காலவரையற்ற போராட்டம் அறிவித்த மீனவர்கள்
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக ஆவேசப்பட்ட அவர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயிகளை தொடர்ந்து மீனவர்களும் போராட உள்ளதால் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி