டு பிளெஸி விளாசல் ; 192 ரன்கள் குவித்த சென்னை அணி!

22596பார்த்தது
டு பிளெஸி விளாசல் ; 192 ரன்கள் குவித்த சென்னை அணி!
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவரில் 192 ரன்களை சென்னை அணி குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி களமிறங்கியது.

ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஜோடி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அதிரடியாக ஆடினார். 8.1 ஓவர் முடிவில் சென்னை அணி முதல் விக்கெட் இழந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்துகளில் 32 ரன்கள் (1 சிக்ஸர் 1 பவுண்டரி) சேர்த்த நிலையில் சுனில் நரைனின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அதேபோல அதிரடியாக ரன் குவித்துவந்த தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை பறக்க விட்டு 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் அதிரடி காட்டினார்.

சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை தொக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி 59 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளை விளாசி 86 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் கடைசி ஓவர் கடைசி பந்தில் டு ப்ளஸி கேட்ச்சாகி அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் கைகொடுத்து ஆடிய மொயீன் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) சேர்த்து களத்தில் இருந்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறமிறங்கவுள்ளது.